ஜெயலலிதா, ஸ்பெக்ட்ரம் ஊழலை விட ஈழப்பிரச்சினை ஏற்படுத்தியத் தாக்கத்தால்தான் ஆட்சிக்கு வர முடிந்தது. ஏனெனில் கிராமத்து மக்களைப் பொறுத்த வரை, கருணாநிதி மட்டுமல்ல, ஜெயலலிதாவும், அனைவருமே ஊழல் செய்பவர்களதான். எனவே ஜெயலலிதாவை கடந்த சட்டமன்றத் தேர்தலில் கைதூக்கி விட்ட ஒரே ஆதரம் முள்ளிவாய்க்காலில் ஓடிய ரத்த ஆறுதான். ஆட்சியேற்றபின் அவரும் அதற்கேற்றாற்போல் (கருணாநிதியின் துரோகங்களை அம்பலப்படுத்துவது போல்) சட்டமன்றத்தில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக் கோரும் தீர்மானம், மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரும் தீர்மானம் என்று நிறைவேற்றி உலகத் தமிழர்களை தலை நிமிர்ந்துப் பார்க்கச் செய்தார். ஆனால் பார்ப்பான் ஆற்றோடு பொனாலும் ஆதாயமில்லாமல் போவானா? இன்று தமிழக அரசின் குரல் ஒரேயடியாக மாறி மூவரின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கில் நீதிமன்றத்தில் எதிர்நிலை எடுத்துள்ளது. சாதரணர்கள் ஜெயாவின் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அதை மையாப்படுத்தி மத்திய அரசின் சக்திகள் அவரை தன்வயப்படுத்துவதாக கூறுகின்றனர். இதுவே மூவரின் தூக்கை ரத்து செய்யக்கூடாது என்ற தமிழக அரசின் குரலாக இன்று ஒலிக்கிறது என்கின்றனர்.
உண்மை என்ன? கருணாநிதியும், ஜெயலலிதாவும் டெல்லிக்கு போனபோது பிரதமரிடமும், சோனியாகாந்தியிடமும் கருணாநிதிக்கு கிடைக்காத மதிப்பு ஜெயலலிதாவுக்குத் தரப்படுகிறது. இடையிலேயே பெங்களூரு வழக்கு. அதில் சாதகமான தீர்ப்பு வர மத்திய அரசிற்கு சாதகமாகக் குரல் கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறாரா ஜெயா? அது உண்மையென்றால் இந்த நாட்டில் நீதி மன்றங்கள் இருப்பதே கேலிக்கூத்தாகி விடும். மூவரின் தூக்குத் தண்டனையும் நிறைவேற்றப்பட்டு ஜெயா பெங்களூரு வழக்கிலிருந்து வழக்கம் போல் விடுபட்டு விட்டால், நீதி மன்றங்கள் தீர்ப்பளிக்க வில்லை என்பது நிரூபணமாகி விடும். ஆனால் இவை அப்படியே நடந்து விடுமா? டெல்லிக்கு போனவாரம் சென்ற துரோகி கருணாநிதி பிரதமரிடம் மூவரையும் தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க தான் கேட்டுக்கொண்டதாக புளிகியிருக்கிறாரே? அதன் பொருள் என்ன? பந்துகள் மாற்றி மாற்றி வீசப்படுகின்றன என்பது மட்டும் தெரிகிறது. எனவே மூவரின் உயிரும் பாதுகாப்பாக இருக்கும் என்பதும் தெரிகிறது. கருணாநிதி தூக்கிலிட வேண்டுமென்று சொன்னால் ஜெயா அவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று சீறுவதும், ஜெயா தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்று சொன்னால் கருணாநிதி மூவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறுவதும் தொடர் கதையாகும். இப்போதைய தமிழக அரசின் நிலைப்பட்டை உற்று நோக்கும்போது கடந்த ஆகஸ்து மாத முடிவில் ஜெயாவின் நிலைப்பாட்டை ஒப்பிட்டு பார்க்க வேண்டியது அவசியம். முதலில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னவர், பின்ன அவ்வாறு சொன்ன மறுநாளே சட்டமன்றத்தில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் கொண்டுவந்தார்.
இதனிடையே உயர் நீதிமன்ற நீதிபதி ‘(மூவரை தூகிலிட விதித்த) தடை தடைதான். வழக்கு முடியும் வரை தடை நீடிக்கும்’ என்று உறுதியாகக் கூறி விட்டார். ஆக களம் விரிவடைந்திருக்கிறது. காலம் நீண்டிருக்கிறது. தமிழ் தேசிய வாதிகளும் ‘படை படைதான், சளைக்க மாட்டோம்’ என்றே வழக்கு நடத்துகின்றனர். ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் கொண்டை ஊசி திருப்பு முனை சிக்கலை எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர்? இது வரை ஜெயாவைப் பயன் படுத்தியாகி விட்டது. கருணாநிதியை பயன் படுத்த முடியாது என்பதும் தெளிவு. உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெற்ற பின் ஜெயலலிதா தனது அரசியல் எதிர்காலத்தை நீட்டிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க.வை முடிந்தவரை பிளவு படுத்த அவர் மத்திய அரசோடும், காங்கிரசோடும் கை குலுக்குவார் என்பது நடக்காததல்ல. அந்த நிலையில் அவரது நிலைப்பாடு தமிழர்களுக்கு எதிராகவும், பார்பன சக்திகளுக்கு ஆதரவாகவும் அமையும். சுப்பிரமணிய சாமியும், சோ. ராமசாமியும் அவரோடு கலந்து பேசுவார்கள். அதனடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். அப்போது கருணாதி களத்தில் குதிப்பார்.ஏற்கனவே மத்திய அரசின் மீது தாங்கமுடியாத சினத்தில் இருக்கும் அவர் அப்போது முழுமையாக மத்திய அரசிற்கு எதிராகத் திரும்புவார். அப்போதும் மூவரின் உயிர் பாதுகாக்கப்படும்.
ஆக தமிழ் தேசிய வாதிகள் முன்னுள்ள இன்றைய கடமை போராட்டத்தை முன்னை விட அதி தீவிரமாக முன்னெடுப்பதன் மூலம், தங்கள் சுயநல அரசியலுக்காக ஈழப் பிரச்சினையை வைத்து சூதாடும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு துரோகக் கூட்டத்தையும் எப்படி வளைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே. தூரோகக் கூட்டங்களை பயன்படுத்துவதைப் பொறுத்தவரை சொல்வோம்: ‘நாங்கள் ஒவ்வொரு முறை உங்களை நோக்கி வரும்போதும் நீங்கள் பார்பனர்களோடு சேர்ந்து கொண்டு பத்து முறை எங்களுக்கு துரோகம் செய்வீர்கள். இருப்பினும் நாங்களே வெல்வோம்’.
Filed under: பகுக்கப்படாதது




