இது வரையிலும் தமிழ் தேசிய வாதிகள் இப்படிப் பேசியதில்லை. இப்படித்தான் பேச வேண்டும். அது என்ன் ‘இப்படி’ என்று நீங்கள் குழம்புவது புரிகிறது. அதாவது தமிழ் தேசிய வாதிகள் ஈழ விடுதலைக் குறித்த கருத்துகளை மேலோட்டமாக பேசியபடியே போய்க்கொண்டிருக்கிறார்கள். வேறெதுவும் செய்வதில்லை. முதன்மையாக அவர்கள் செய்ய வேண்டியது தமிழ் நாட்டு மக்கள் எப்படி இந்திய அரசால் துரோகமிழைக்கப் பட்டார்கள் என்று பொது மேடையில் பேசி மக்களை அமைப்பக்க வேண்டும் என்று கவனிப்பதில்லை. அதை இன்னும் அய்யா நெடுமாறனோ, அண்ணன் சீமனோ செய்ய வில்லை.
ஆனால் அந்தக் குரல் மெதுவாகத்தான் பொது மேடைக்கு வரும். அப்படி வந்து விட்டது. இப்போது முதன் முறையாக வந்து விட்டது.தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் தலைவர் கோயெம்பேட்டில் நடைபெறும் உண்ணாநோன்பு நிகழ்வில் அதனை வெளிப்படுத்தினார்.
த.தே.பொ.க. தலைவர் பெ.மணியரசன் பேசும் போது,“1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நம் தமிழ் மாணவர்கள் 300 பேரை இந்திய அரசு சுட்டுக் கொன்றது. 1987இல் இராஜீவ் காந்தியின் உத்தரவின் பேரில் தமிழீழத்திற்குச் சென்ற இந்திய அமைதிப் படை 6000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை கொன்றொழித்து, நம் தமிழ்ப் பெண்களை சீரழித்தது. அதே இந்தியப் படை தான் நம் தமிழ்நாட்டு மீனவர்கள் 600 பேரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொல்வதைப் பார்த்து இரசிக்கிறது. 2009இல் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க சிங்களவனுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்தது, இந்திய அரசு. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்திய அரசு இரத்தவெறி அடங்காமல் இம்மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. தமிழினத்திற்கு மான உணர்ச்சி இருக்கிறதா என சோதித்துப் பார்க்கிறது இந்திய அரசு” என்றார்.
இந்தத் தகவல்தான் இப்போது தமிழக மக்களைச் சென்று சேரவேண்டியது. ஆம். ஈழ விடுதலைப் போராளிகள் தங்கள் பழைய வரலாறை அடிப்படையாக்கித்தான் விடுதலைப் போரைத் தொடங்கினார்கள். இஒப்போது நாம் அதைச் செய்ய வேண்டும். அகனைச் செய்வோம். இந்திய நமது தாய் நாடல்ல, தமிழகமே நமது நாடு, அதனை பிரித்தெடுக்க…தனியாட்சி அமைக்க இன்றே திரள்வோம்.
Filed under: பகுக்கப்படாதது




